Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு இன்று பொங்கல் விடுமுறை

கேரளாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் 6 மாவட்டங்களுக்கு வெள்ளிக்கிழமை பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்டை மாநிலமான கேரளாவில் கொல்லம், இடுக்கி, வயநாடு, பத்தனம்திட்டா, திருவனந்தபுரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அந்தப் பகுதிகளில் கேரள அரசு வழக்கமாக ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் விடுமுறை விடுவது வழக்கம். இந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் விடுமுறை என குறிப்பிடப்பட்டிருந்தது.

image

இதை சுட்டிக்காட்டி கேரள அரசுக்கு கடிதம் எழுதிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்றைய தினம் பொங்கல் விடுமுறை விடுமாறு கேட்டிருந்தார். இதனையடுத்து கேரள அரசு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் பொங்கல் விடுமுறை என அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: ”உணவகத்திற்கு வருவதில்லை” - உழைக்கும் திருநங்கைகளை நிராகரிக்கிறதா சமூகம்?- ஒரு 360° பார்வை

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்