வருகிற 12-ஆம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வர உள்ள நிலையில், ஒமைக்ரான் கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும் என பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி டெல்லியில் இருந்து விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது...
வருகிற 12-ஆம் தேதி பிரதமர் மோடியின் தமிழக வருகை உறுதியாகி உள்ளது. ஒமைக்ரான் மற்றும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை பின்பற்றி நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம் என்றவரிடம்...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு?
நாங்கள் ஆளும் கட்சியும் இல்லை. முக்கிய எதிர்க் கட்சியும் இல்லை, நாங்கள் களத்தில் ஆயத்தமாக உள்ளோம்.
வெள்ள பாதிப்பு நிவாரணம் எப்போது வரும்?
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளின்படி அனைத்து மாநிலங்களுக்கும் நிதி அளிக்கப்படும். அந்த வகையில் தமிழகமும் நிதியை பெறும். மாநில அரசு தங்களுடைய பங்களிப்பை முதலில் வெளியிட வேண்டும். பிறகு மத்திய அரசு வெளியிடும் என்றார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்