உத்தராகண்ட் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து கட்சி மேலிடமே இறுதி முடிவை எடுக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.
மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 50 இடங்களில் போட்டியிடுவதற்கு கூட்டணிக் கட்சிகளுடன் பரஸ்பர புரிதலை எட்டியிருப்பதாக கூறினார். இவ்விசயத்தில் கட்சி மேலிடம் இன்று இறுதி முடிவு எடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார். 70 தொகுதிகளைக் கொண்ட உத்தராகண்ட் சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது மநீம
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
0 கருத்துகள்