Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரஹானே, புஜாராவால்தான் இந்திய அணி தோற்றது: அடுல் வாசன் காட்டம்


புதுடெல்லி : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரஹானே, புஜாராவின் மோசமான பேட்டிங் காரணமாகத்தான் இந்திய அணி தோற்றது.அவர்களுக்கான வாய்ப்புக்கதவு மூடப்பட்டதுஎன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் அடுல் வாசன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றியது. முதல் டெஸ்டில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தபோதிலும் அடுத்தடுத்து இரு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியைக் கோட்டைவிட்டது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்