Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

'சிவகாசி மாநகராட்சியை அதிமுக கைப்பற்றும்'- ராஜேந்திர பாலாஜி

சிவகாசி மாநகராட்சி  1வது வார்டு பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கினை செலுத்தினார்.

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் உள்ளிட்ட 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. பொதுமக்களும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிவகாசி மாநகராட்சி  1-வது வார்டு பகுதியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது வாக்கினை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,  முதன்முதலாக அறிவிக்கப்பட்ட சிவகாசியில் மேயர் மற்றும் துணை மேயர் பதவியை அதிமுக கைப்பற்றும். 48 வார்டுகளில்  33   இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிக்கலாம்: கோவை: கைது செய்யப்பட்ட எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 எம்எல்ஏக்கள் விடுவிப்பு

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்