Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IND vs WI 2nd ODI | தாக்குப்பிடிக்காத முன்னணி வீரர்கள்... சூர்யகுமார் துணையுடன் இந்தியா 237 ரன்கள் சேர்ப்பு

அகமதாபாத்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது இன்னிங்ஸில் 237 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் முன்னணி வீரர்கள், மேற்கிந்தியத் தீவு பவுலர்களின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்துவருகிறது. கே.எல்.ராகுல் மீண்டும் அணியினருடன் இணைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் இஷான் கிஷன் நீக்கப்பட்டிருந்தார். அதேபோல் மேற்கிந்தியத் தீவுகள் அணியிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. கேப்டன் பொல்லார்டு விளையாட காரணத்தால் இன்று நிகோலஸ் பூரான் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்