Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்லியில் இன்று 44 டிகிரி செல்சியஸ் வெயில் - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) 44 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், டெல்லி, ஹரியானா, ஒடிசா ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும். தற்போதே இந்த மாநிலங்களில் 45 டிகிரி செல்சியஸ் (113 டிகிரி பாரன்ஹீட்) அளவை தாண்டி வெயில் பதிவாகி உள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு வடமேற்கு மாநிலங்களில் கூடுதலாக 2 டிகிரி செல்சியஸ் வெயில் இருக்கும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அனல் காற்று வீசும். இந்த நிலை மே முதல் வாரம் வரை நீடிக்கும். அதன்பிறகு மழை அதிகரிக்கும்போது வெப்ப நிலை குறையும். தற்போது மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசத்தில் 45 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி வருகிறது. டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) 44 டிகிரி செல்சியஸ் பதிவாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

வெப்பநிலை அதிகரிப்பினால் அனல் காற்று வீசக்கூடும் என ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஜம்முவிலும் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை உள்ளது. இங்கு அதிக வெப்ப நிலை காரணமாக மின்சாரம் மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று (வியாழக்கிழமை) அதிகபட்சமாக 43.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏப்ரல் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பமாகும்.  

இதையும் படிக்கலாம்: ஓராண்டுக்குப் பின் மீண்டும் வனத்தை விட்டு வெளியேறிய 'பாகுபலி'

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்