Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஆட்டத்தின் முடிவை மாற்ற விக்கெட் தேவை: ராஜஸ்தான் அணி வீரர் யுவேந்திர சாஹல் குதூகலம்

மும்பை: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. இந்த வெற்றியில் ஜாஸ் பட்லரின் 103 ரன்களும், யுவேந்திர சாஹல் கைப்பற்றிய ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்களும், 11 ரன்கள் தேவைப்பட்ட கடைசி ஓவரை கட்டுக்கோப்புடன் வீசிய மெக்காயும் முக்கிய பங்கு வகித்தனர்.

4 ஓவர்களை வீசி 40 ரன்களை விட்டுக்கொடுத்து ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்களை வீழ்த்திய யுவேந்திர சாஹல் கூறும்போது, “ஆட்டத்தின் முடிவை மாற்ற வேண்டுமென்றால் நான் விக்கெட்கள் வீழ்த்த வேண்டியிருந்தது. நான் எனது பந்து வீச்சில் அதிகம் பணியாற்றினேன். பயிற்சியாளர்கள் மற்றும் கேப்டனிடம் பேசினேன். நான் கூக்லியை பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த ஒரு வாய்ப்பை மட்டும் பயன்படுத்த விரும்பவில்லை. ஹாட்ரிக்குடன் டாட் பந்துகளும் வீசியது மகிழ்ச்சியாக உள்ளது. கூக்லி நன்றாக வந்ததால் அதை வெங்கடேஷ் ஐயருக்கு வீசினேன்” என்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்