புனே: ஐபிஎல் 15வது சீஸனின் 23வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
199 ரன்கள் என்ற மெகா இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு இந்த முறை ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் நல்ல துவக்கம் கொடுக்கவில்லை. முதல் 3 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா, 4வது ஓவரில் ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த இஷான் கிஷனை வைபவ் அரோரா வெளியேற்ற மும்பை இந்தியன்ஸ் அணி தடுமாறியது.
0 கருத்துகள்