Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 | டெல்லி அணியில் ஒருவருக்கு கரோனா; பெங்களூரு உடனான போட்டி திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்பு

மும்பை: டெல்லி கேபிடல்ஸ் அணியின் முகாமில் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இருந்தாலும் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டி திட்டமிட்டபடி நடைபெற வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

நடப்பு ஐபிஎல் சீசனில் விளையாடி வரும் பத்து அணி வீரர்களும் கரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பயோ-பபுளில் இருந்தபடி விளையாடி வருகின்றனர். இந்நிலையில், டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் ஃபார்ஹாத்துக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவர் உட்பட அந்த அணியின் வீரர்கள் மற்றும் உறுப்பினர்கள் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்