Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

26-வது முறை எவரெஸ்டில் ஏறி புதிய சாதனை படைத்தார் காமி

காத்மாண்டு: உலகிலேயே மிக உயரமான சிகரம் எவரெஸ்ட். சீனா, நேபாள எல்லையில் உள்ள இதன் உயரம் 8,848 மீட்டர் (29,035 அடி) ஆகும். இதன் உச்சியை அடைந்து பலர் சாதனை படைத்து வருகின்றனர். இந்த சிகரத்தின் மீது ஏறுவோருக்கு வழிகாட்டியாக இருப்பவர் காமி ரிட்டா (52). இவர் 1994-ல் முதன்முதலாக இந்த சிகரத்தில் ஏறினார். கடந்த 2018-ம் ஆண்டு மே 16-ம் தேதி 22-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார். இதன்மூலம் அதிக முறை இந்த சிகரத்தை அடைந்த முதல் நபர் என்ற சாதனை படைத்தார்.

இந்நிலையில், காமி ரிட்டா 11 வழிகாட்டிகள் அடங்கிய குழுவினருடன் கடந்த 7-ம் தேதி 26-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி தனது முந்தைய சாதனையை அவரே முறியடித்துள்ளார். இந்த தகவலை செவன் சமிட் ட்ரெக்ஸ் நிறுவனத்தின் மேலாளர் தவா ஷெர்பா தெரிவித்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்