குவாங்ஜு: வில்வித்தை உலகக் கோப்பை நிலை 2-ல் இந்திய மகளிர் அணி ரீகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றது.
தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிருக்கான ரீகர்வ் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ரிதி போர், கோமலிகா பாரி, அங்கிதா பகத் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி, சீன தைபே அணியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
0 கருத்துகள்