Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடர் | முதல் முறையாக மகளிர் நடுவர்களை களம் இறக்க முடிவு

தோஹா: முதல் முறையாக பிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் மகளிரை நடுவர்களாக களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முடிவு உலக அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா) கத்தார் நாட்டில் கால்பந்து உலகக் கோப்பையை நடத்த உள்ளது. மொத்தம் 32 அணிகள் இதில் பங்கேற்று விளையாடுகின்றன. அணிகள் மொத்தம் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. கத்தார் நாட்டில் உள்ள 8 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரர்கள் இதில் விளையாடுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்