Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சர்வதேச மகளிர் டென்னிஸ் சென்னையில் நடைபெறுகிறது - முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் கடிதம் வழங்கினார்

சென்னை: சென்னையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உலக மகளிர் டென்னிஸ் போட்டி நடத்துவதற்கான தமிழக அரசின் கொள்கை அளவிலான இசைவு கடிதத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.

இந்திய வரலாற்றில் முதல்முறையாக, மாமல்லபுரத்தில் ஜூலை 28-ம் தேதி முதல் ஆக.10-ம் தேதி வரை 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்க உள்ளது. 186 நாடுகளில் இருந்து 2,000-க்கும் அதிகமான செஸ் வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த நிலையில், தமிழக அரசு - இந்திய சதுரங்க கூட்டமைப்பு (AICF) இடையே இப்போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்