Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

குஜராத் | நாட்டிலேயே முதல்முறை; ட்ரோன் மூலம் பார்சல் டெலிவரி செய்த இந்திய அஞ்சல் துறை

அகமதாபாத்: நாட்டிலேயே முதல் முறையாக ட்ரோன் மூலம் பார்சலை டெலிவரி செய்து அசத்தியுள்ளது இந்திய அஞ்சல் துறை. இது சோதனை முயற்சியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தின் புஜ் (Bhuj) தாலுகாவில் உள்ள ஹபே (Habay) கிராமத்தில் இருந்து கட்ச் மாவட்டத்தில் உள்ள நேர் கிராமத்திற்கு ட்ரோன் மூலம் பார்சல்களை அனுப்பி உள்ளது இந்திய அஞ்சல் துறை. மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சுமார் 46 கிலோ மீட்டர் தூரத்தை வெறும் 25 நிமிடங்களில் கடந்த ட்ரோன், பார்சலை டெலிவரி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் வரும் நாட்களில் ட்ரோன் மூலம் டெலிவரி செய்யும் பணியை இந்திய அஞ்சல் துறை முன்னெடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்