கொல்கத்தா: ஐபிஎல் தொடரில் லக்னோ அணியை வீழ்த்தி குவாலிபையர் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது பெங்களூரு அணி. கேஎல் ராகுல் சிறப்பாக ஆடிய போதிலும், கடைசி கட்டத்தில் அவரை வீழ்த்தியதுடன் தொடர்ந்து இரண்டு விக்கெட்கள் எடுத்து லக்னோ கனவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹேசில்வுட்.
கொல்கத்தாவின் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பு ஐபிஎல் சீசனுக்கான எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் 208 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி முதல் ஓவரிலேயே முதல் விக்கெட்டை பறிகொடுத்தது. கடந்த போட்டியில் செஞ்சுரி அடித்த குயிண்டன் டி காக் இப்போட்டியில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடித்து வெளியேறினார். ஒன்டவுனில் மனன் வோராவும் நிலைக்க தவறினார். 19 ரன்களில் அவர் ஆட்டமிழந்தார். எனினும் கேப்டன் பொறுப்பை உணர்ந்து விளையாடினார் கேஎல் ராகுல்.
0 கருத்துகள்