Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 Qualifier 1 | எடுபடாத ராஜஸ்தான் பந்துவீச்சு - முதல் அணியாக பைனலுக்கு நுழைந்த குஜராத்

ஈடன்கார்டன்: கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சீசனின் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் பைனலுக்கு நுழைந்துள்ளது.

189 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் விருத்திமான் சஹா. இதன்பின் சுப்மன் கில் உடன் இணைந்த மேத்யூ வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் இணைந்து 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் சேர்த்தனர். 10 ரன்கள் ரேட்டில் இருவரும் ரன்கள் சேர்த்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக கில் ரன் அவுட் மூலம் 35 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்த ஓவரில் மேத்யூ வாடும் 35 ரன்களுக்கு நடையை கட்டினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்