Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IPL 2022 | பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் - லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கருத்து

மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியடைந்தது. 179 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியால் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 13 ஆட்டங்களில் விளையாடி உள்ள லக்னோ அணிக்கு இது 5-வது தோல்வியாக அமைந்தது. இருப்பினும் அந்த அணி 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-ம் இடம் வகிக்கிறது.

போட்டி முடிவடைந்ததும் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறும்போது, “179 ரன்கள் இலக்கு எட்டக்கூடியதாகவே கருதினேன். பந்து வீச்சில்சிறப்பாக செயல்பட்டு ராஜஸ்தானை கட்டுப்படுத்தினோம். ஆனால் மீண்டும் ஒரு முறை குழுவாக பேட்டிங் திறனை வெளிப்படுத்த முடியாமல் போனது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்