Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளரை கட்டாயம் அனுப்பி வைக்க வேண்டும் - இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவு

புதுடெல்லி: தேசிய, சர்வதேச போட்டிகளின் போது வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் கட்டாயம் செல்ல வேண்டும் என்று இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்லோவேனியாவில் நடைபெற உள்ள சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்பதற்காக 6 பேர் கொண்ட இந்திய குழு அந்நாட்டுக்கு அண்மையில் சென்றது. அதில் 5 வீரர்கள், ஒரு வீராங்கனை இடம்பெற்றிருந்தனர். இக்குழுவுக்கு ஆர்.கே. சர்மா தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். இதனிடையே, ஆர்.கே. சர்மா தனக்கு பாலியல் ரீதியில் தொல்லை தருவதாக குழுவில் இடம்பெற்றிருந்த வீராங்கனை இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் புகார் செய்தார். இதையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஆர்.கே. சர்மா நீக்கப்பட்டு அவர் மீது துறை ரீதியிலான விசாரணை தொடங்கியுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்