புதுடெல்லி: புதிதாக வாங்கிய செல்போன், லேப்டாப், டேப்லட் உடனடியாக பழுதானால் ஏற்படும் மன உளைச்சலுக்கு அளவே கிடையாது. இத்தகைய சாதனங் களை ஆன்லைன் மூலமாகவே பலரும் வாங்கியிருப்பர். அவற்றுக்கு உத்தரவாதம் இருந்தாலும், அதை பழுது நீக்கித் தரும் மையங்களைத் தேடி அலைவது பெரும் பிரச்சினையாக இருக்கும்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், ‘பழுது நீக்கம் உங்கள் உரிமை’ (Right to Repair) எனும் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நுகர்வோரை வலுமிக்கவர்களாக மாற்றும் நோக்கில் இந்த சட்டம் இருக்கும்.
0 கருத்துகள்