Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

திருமணத்தை மீறிய உறவால் பிறந்த குழந்தை – குழிதோண்டி புதைத்த கொடூர தாய்

வலங்கைமான் தாலுகா, வேடம்பூரில் திருமணத்தை மீறிய உறவால் பிறந்த குழந்தையை தாய் மண்ணில் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திட்டச்சேரி பகுதியைச் சேர்ந்தவர்கள் முத்து - ரேணுகா தம்பதியர். இவர்களுக்கு கடந்த 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு 11 வயதில் இரட்டை ஆண் குழந்தைகளும் 8 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

image

இந்நிலையில், ரேணுகாவின் கணவர் முத்து கடந்த ஏழு வருடங்களாக திருப்பூரில் பணியாற்றி வருகிறார். இதையடுத்து தனது மூன்று குழந்தைகளுடன் தாய்; வீட்டில் வசித்து வரும் ரேணுகா குடவாசலில் உள்ள ஒரு ஜவுளி கடையில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இவருக்கு கமலேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவால் கர்ப்பமடைந்துள்ளார்.

இதையடுத்து கடந்த 22ஆம் தேதி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், நேற்று வீட்டுக்கு ரேணுகா, குழந்தையை தனது வீட்டின் கொல்லைப் புறத்தில் புதைத்து விட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு சென்ற காவல் துறையினர், ரேணுகா குழந்தையை கொன்று புதைத்தாரா? ஆல்லது குழந்தை இறந்து அதன் பிறகு புதைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.

image

இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வலங்கைமான் வட்டாட்சியர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் நேரில் வந்து விசாரணை செய்தனர். இதையடுத்து குழந்தை புதைக்கப்பட்ட இடத்தை இன்று திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் தோண்டிட போவதாக தெரியவருகிறது.

இந்த சம்பவம் வலங்கைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்