லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் தி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் 2-வது ஆட்டத்தில் இரு அணிகளும் இன்று மாலை 5.30 மணிக்கு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.
முதல் ஆட்டத்தில் பந்து வீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா அபாரமாக செயல்பட்டு இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்குள் சுருட்ட உதவினார். அவருக்கு உறுதுணையாக மொகமது ஷமி, பிரஷித் கிருஷ்ணா செயல்பட்டனர். இன்றைய ஆட்டத்திலும் இந்திய வேகங்கள், இங்கிலாந்து அணிக்கு சவால் தரக்கூடும்.
0 கருத்துகள்