Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘சதுரங்க பலகையிலும் போர்’ | பயிற்சி கிளப் இல்லை, 2 நாள் விமான பயணம் - பாலஸ்தீன அணி உருக்கம்

செஸ் ஒலிம்பியாட்டில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 8 வயதான சிறுமி, ராண்டா சேடர் பங்கேற்று விளையாடி வருகிறார். இதன் மூலம் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்றுள்ள இளம் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதே போன்று ஓபன் பிரிவில் ராண்டாவின் மூத்த சகோதரர் மொகமது சேடர் விளையாடி வருகிறார்.

இவர்களைப் பொறுத்தவரை மோதல் என்பது சதுரங்கப் பலகையில் மட்டுமல்ல. இஸ்ரேலுடன் நடந்து வரும் மோதலால் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதே பெரிய போர் போன்று உள்ளது. செஸ் விளையாட்டை கற்றுக்கொள்ள பெரிய அளவில் வசதிகள் இல்லாத நாட்டில் இருந்து இவர்கள் பங்கேற்று விளையாடி வருவது கவனம் பெற்றுள்ளது. ராண்டா, மொகமதுவின் தந்தை சேடர் கூறும்போது, “ராண்டா 5 வயதில் விளையாடினார். எனக்கு ராண்டா, மொகமது உள்பட 5 குழந்தைகள் உள்ளனர். இதில் 4 பேர் செஸ் விளையாடக்கூடியவர்கள்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்