Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

செஸ் ஒலிம்பியாட்: 9-ம் தேதியே போட்டி நிறைவு விழா

சென்னை: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா 9-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

போட்டியின் நிறைவு விழா 10-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் 9-ம் தேதியே நிறைவு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளையாட்டு ஏற்பாட்டு குழுவினர் கூறும்போது, “நிறைவு விழா 9-ம் தேதி மாலை 5.30 முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற உள்ளது. நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, 5 முறை உலக செஸ் சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் விழாவில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன” என்றனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்