Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

Asia Cup 2022 | இந்தியாவின் புதிய அணுகுமுறைக்கான சோதனைக்களம்

முன்பெல்லாம் இந்திய அணி தொடக்கத்தில் விக்கெட் விழாமல் பார்த்துக்கொண்டு இறுதிக்கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கும் பாணியை கடைபிடித்தது. இதுவே தொடர்ச்சியான வெற்றிக்கு ‘தாரக மந்திரம்’ என கருதிவந்தது. ஆனால் 2021-ம் ஆண்டு டி 20 உலகக்கோப்பையில் இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறியதால் இவை அனைத்தும் மாறத்தொடங்கிவிட்டது.

எதிரணிக்கு தொடக்கத்திலேயே ஏன் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை எழத் தொடங்கி, முதல் பந்தில் இருந்தே ஆக்ரோஷ அணுகுமுறையை கடைபிடிக்கும் எண்ணத்தை வேரூன்றிக் கொண்டது இந்திய அணி. இதுகுறித்து சமீபத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறும்போது, “கடந்த ஆண்டு நடைபெற்ற டி 20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் எங்களது ஆட்ட அணுகுமுறையில் மாற்றம் தேவை என்பதை உணர்ந்தோம். இதுதொடர்பாக வீரர்களுக்கு தெளிவான தகவலை கூறினோம்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்