Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று

மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27-ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் இந்திய அணியினருக்கு வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் மருத்துக்குழு கண்காணிப்பில் திராவிட் உள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. மீண்டும் நடத்தப்படும் சோதனையில் கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்ட பின்னர் இந்திய அணியினருடன் ராகுல் திராவிட் இணைவார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்