Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

திறமை இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது - விராட் கோலி ஆவேசம்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச அரங்கில் சதம் அடித்து ஏறக்குறைய 3 வருடங்களாகிறது. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதைத் தொடர்ந்து சமீபத்திய தொடர்களில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் புத்துணர்ச்சியுடன் வரும் 27-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் (டி 20 வடிவம்) கலந்துகொள்ள உள்ளார்.

இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது: எனது ஆட்டம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிவேன், சூழ்நிலைகள் மற்றும் நிலைமைகளை எதிர்கொள்ளும் திறமை மற்றும் பல்வேறு வகையான பந்துவீச்சுகளை எதிர்கொள்ளும் திறமை இல்லாமல் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்க முடியாது. இந்த காலக்கட்டத்தை (மோசமான பார்ம்) கடந்து செல்வதற்கான செயல்முறை எளிதானதே.


கருத்துரையிடுக

0 கருத்துகள்