Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

"நான் பாத்துக்குறேன்" - கடைசி ஓவரில் சிக்ஸர் விளாசி தோனியை நினைவூட்டிய ஆட்ட நாயகன் ஹர்திக்

துபாய்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் இந்திய அணியின் வெற்றிக்கு ஆறு ரன்கள் தேவைப்பட சிக்ஸர் விளாசி தனது ஆட்டத்தின் மூலம் தோனியை நினைவூட்டி இருந்தார் ஹர்திக் பாண்டியா. இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றிருந்தார்.

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நடப்பு ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்று போட்டியில் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்தது. பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்கள் எடுத்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்