புளோரிடா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டி20 தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய கிரிக்கெட் அணி.
இந்தியா - மேற்கிந்திய தீவுகள் இடையேயான 4வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது. கடந்தப் போட்டியில் காயத்தால் வெளியேறிய கேப்டன் ரோகித் சர்மா இந்தப் போட்டியில் களமிறங்கினார். அவருடன் வழக்கம் போல சூர்யகுமார் யாதவ் ஓப்பனிங் செய்தார். இருவரும் பவர் பிளே ஓவர்களில் அதிரடி காட்டினர். எனினும், 4.4வது ஓவரிலேயே 33 ரன்களோடு ரோகித் சர்மா முதல் விக்கெட்டாக நடையை கட்டினார்.
0 கருத்துகள்