Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த கடைக்கு சீல்!

சங்கரன்கோவில் அருகே பெட்டிக்கடையில் தின்பண்டங்கள் வாங்கச் சென்ற பட்டியலின மாணவர்கள் தின்பண்டம் வழங்கக் கூடாது என ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளது எனவும் இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வர வேண்டாம் என வீட்டில் போய் சொல்லுங்கள் எனக் கூறி மாணவர்களை திருப்பி அனுப்பிய வீடியோ காட்சி , சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து, ராமச்சந்திர மூர்த்தி என்ற நபரை நல்லூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கரன்கோவில் கோட்டாட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர், பட்டியலின மாணவர்களுக்கு திண்பண்டம் வழங்க மறுத்த பெட்டிக்கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்