Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தூத்துக்குடி: பாஜக பிரமுகரின் ஆம்னி பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீச்சு.!

தூத்துக்குடியை சேர்ந்த பாஜக பிரமுகரின் ஆம்னி பேருந்து மீது வீசப்பட்ட பெட்ரோல் குண்டு அதிர்ஷ்டவசமாக பஸ்ஸின் மீது படாமல் தரையில் விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.

பாஜக ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவர் விவேகம் ரமேஷ். இவர் விவேகம் டிராவல்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடியில் இருந்து சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு ஆம்னி பேருந்துகளை இயக்கி வருகிறார்.

image

இந்நிலையில் இவரது ஆம்னி பஸ் இன்று இரவு திருச்செந்தூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கோயம்புத்தூருக்கு புறப்பட்டது. அப்போது பஸ் தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே வந்து பணிகளை ஏற்றிசெல்லும பொழுது புதிய பேருந்து நிலைய மேம்பாலத்திலிருந்து மர்ம நபர்கள் பஸ் மீது பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதிர்ஷ்டவசமாக வீசப்பட்ட பெட்ரோல் குண்டு பஸ்ஸின் மீது படாமல் தரையில் விழுந்ததனால் பெரும் அசம்பாவித சம்பவம் இல்லாமல் தவிர்க்கப்பட்டது.

image

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி டவுன் டிஎஸ்பி சத்தியராஜ் மற்றும் வடபாகம் காவல்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதனை தொடர்ந்து விவேகம் டிராவல்ஸ் ரமேஷ், வடபாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

image

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM


கருத்துரையிடுக

0 கருத்துகள்