Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் | செக். குடியரசு வீராங்கனை லிண்டா சாம்பியன்

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செக். குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் கடந்த 12-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மக்டாலினெட்டும், செக். குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவும் மோதினர். இதில் லிண்டா ஃப்ருஹ்விரடோவா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மக்டா லினெட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்