Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

தள்ளாடும் இந்திய அணியின் இறுதிக்கட்ட பந்து வீச்சு

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் சமீப வாரங்களில் நன்றாக முன்னேற்றம் கண்டுள்ள நிலையில் மொஹாலியில் நேற்று முன்தினம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டி 20 ஆட்டத்தில் பந்து வீச்சு செயல்திறன் அதிக கேள்விகளை எழுப்பியுள்ளது. ஏனெனில் 208 ரன்களை குவித்தும் எந்தவித தாக்கமும், வலுவும் இல்லாத பந்து வீச்சால் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.

மிகப்பெரிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி 4 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டுள்ளதன் மூலம் இந்திய அணியின் பந்து வீச்சு எந்த வகையில் சுணக்கம் கண்டுள்ளது என்பதை அறியலாம். புவனேஷ்வர் குமார், ஹர்ஷால் படேல் ஆகியோர் கூட்டாக 8 ஓவர்களை வீசி 101 ரன்களை வழங்கினர். பந்து வீசிய 6 பேரில் அக்சர் படேல் மட்டுமே ஓவருக்கு சராசரியாக 4.23 ரன்களை விட்டுக்கொடுத்தார். மற்ற 5 பேருமே சராசியாக 11 ரன்களுக்கு மேல் தாரை வார்த்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்