புது டெல்லி: பட்ஜெட் விலையில் ரெட்மி நிறுவனம் ஏ1+ எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்ப்போம். இந்த போன் ரியல்மி, போக்கோ போன்ற நிறுவனங்களின் மலிவு விலை போன் விற்பனையில் கடுமையான போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ஏ1+ போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
0 கருத்துகள்