Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

IND vs SA | டிரிஸ்டன் ஸ்டப்ஸ்க்கு மன்கட் அவுட் எச்சரிக்கை விடுத்த தீபக் சஹார் - போட்டியின் இடையே சுவாரஸ்யம்

இந்தூர்: இந்தூரில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது.

இந்தப் போட்டியின்போது முதல் இன்னிங்சில் பந்துவீசிய இந்திய வீரர் தீபக் சாஹர், தென்னாபிரிக்க பேட்ஸ்மேன் டிரிஸ்டன் ஸ்டப்ஸுக்கு மன்கட் அவுட் எச்சரிக்கை செய்தது வைரலாகி வருகிறது. ஆட்டத்தின் 16வது ஓவரின் முதல் பந்தை தீபக் சாஹர் வீசியபோது நான்-ஸ்ட்ரைக்கர் எல்லையில் இருந்த டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிக தூரம் சென்றார். இதை கவனித்த தீபக் சாஹர் அவரை மன்கட் அவுட் செய்யப்போவது போல் டிராமா செய்தார். ஆனால், அவரை அவுட் ஆக்காமல் எச்சரிக்கையோடு விட்டுவைத்தார். இந்த சம்பவங்களை பார்த்துக்கொண்டிருந்த இந்திய கேப்டன் ரோகித் உட்பட பலரும் புன்னகையுடன் இந்த சுவாரஸ்யத்தை ரசித்தனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்