Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

T20 WC | டாப் 4-ல் இடம்பெற இந்திய அணிக்கு 30% மட்டுமே வாய்ப்பு: கபில் தேவ் கவலை

லக்னோ: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் டாப் 4 அணிகளில் ஒன்றாக இடம்பெற இந்திய அணிக்கு வெறும் 30 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். ரோகித் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வரும் 23-ம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த தொடரில் தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி 1983 மற்றும் 2011 என இரண்டு முறை 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை வென்றுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் 2007-ம் ஆண்டு நடைபெற்ற முதல் டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பிறகு இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லவில்லை. அதனால் இந்த முறை இந்திய அணி உலகக் கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தச் சூழலில் கபில் தேவ் இப்படிச் சொல்லியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்