Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

T20 WC | பேட்டிங்கில் மிரட்டிய ரோகித், கோலி and சூர்யகுமார் யாதவ்: நெதர்லாந்துக்கு 180 ரன்கள் இலக்கு

சிட்னி: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் நெதர்லாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 179 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சிறப்பாக பேட் செய்திருந்தனர்.

சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங் தேர்வு செய்திருந்தது. இந்திய அணிக்காக ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கி இருந்தனர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ராகுல் 12 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி வெளியேறினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்