Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

T20 WC | எரிச்சலூட்டிய 'ஈ' - கவனம் ஈர்க்கும் அயர்லாந்து ரசிகரின் மெசேஜ்

மெல்பேர்ன்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியை நேரில் பார்த்து வரும் ரசிகர் ஒருவர் ஆஸ்திரேலிய நாட்டில் பெய்து வரும் மழையை காட்டிலும் அங்குள்ள ஈக்கள் எரிச்சலூட்டி வருவதாக தெரிவித்துள்ளார். அது கவனம் பெற்று வருகிறது.

இந்த போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அங்கு மழை பொழிவு இருப்பதே இதற்கு காரணம். அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட் செய்து 15 ஓவர்கள் முடிவில் 127 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஆண்ட்ரூ 62 ரன்கள் எடுத்து அவுட்டானார். டக்கர், 34 ரன்கள் எடுத்தார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்