Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சூர்யகுமார் யாதவ்: ஓராண்டில் சர்வதேச டி20 போட்டிகளில் 1,000 ரன்கள் குவித்த 2-வது வீரர்!

மெல்பர்ன்: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்று குரூப்-2 பிரிவில் முதலிடம் பிடித்தது. இதையடுத்து நவம்பர் 10-ம் தேதி அடிலெய்டில் நடைபெறும் 2-வது அரை இறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் மைதானத்தில் இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதிய சூப்பர் 12 சுற்றில் குரூப்-2 பிரிவின் கடைசி ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 51 ரன்கள் குவித்தார். கேப்டன் ரோஹித் சர்மா 15 ரன்களிலும், விராட் கோலி 26 ரன்களிலும், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் 3 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 18 ரன்களிலும் வீழ்ந்தனர். ஆனால் 4-வது வீரராக களமிறங்கிய சூர்யகுமார் யாதவ், ஜிம்பாப்வே வீரர்களின் பந்துகளைச் சிதறடித்து ரன்களைக் குவித்தார். கடைசி கட்ட ஓவர்களில் சிக்ஸர்களையும், பவுண்டரிகளையும் பறக்கவிட்டு அவர் அரை சதமடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 25 பந்துகளில் 4 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் அவர் 61 ரன்களை விளாசினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்