Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

FIFA WC 2022 | நம்முடைய ரொனால்டோவையும், மெஸ்ஸியையும் காண்பது எப்போது?

சுமார் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா இதுவரை பிஃபா உலகக் கோப்பை தொடரில் விளையாடியது இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உலகளாவிய இந்தத் தொடரில் அரிதிலும் அரிதாக 1950-ம் ஆண்டு போட்டியில் விளையாட இந்தியா தகுதி பெற்றிருந்தது. இதுவே முதலும் கடைசியான வாய்ப்பாக இந்தியாவுக்கு அமைந்தது.

1950-ல் பிரேசில் நாட்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் கலந்து கொள்ள இந்திய கால்பந்து அணி தகுதி பெற்றிருந்த போதிலும் ஒரு வித்தியாசமான காரணத்துக்காக அந்தத் தொடரில் விளையாடும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. இந்த உலகக் கோப்பையில் இந்தியா பலம் வாய்ந்த சுவீடன், இத்தாலி, பராகுவே அணிகளுடன் மோதும் வகையில் அட்டவணை இருந்தது. அன்றைய காலக்கட்டங்களில் இந்திய அணி வீரர்கள் கால்பந்து போட்டிகளுக்கான பாரம்பரியமான பூட்ஸ்களை அணியாமல் வெறும் கால்களுடன் போட்டிகளில் பங்கேற்றனர். இதை காரணம் காட்டித்தான் 1950 உலகக் கோப்பையில் இந்தியா பங்கேற்க பிஃபா தடைவித்தது.


கருத்துரையிடுக

0 கருத்துகள்