Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ரான்சம்வேர் தாக்குதல்: சீன ஹேக்கர்கள் மீது சந்தேகம்

புதுடெல்லி: கடந்த மாதம் இறுதி வாரத்தில்டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கணினிகள் திடீரென்று முடங்கின. முடக்கத்துக்கான காரணத்தை ஆய்வு செய்தபோது ஹேக்கர்கள் சைபர் தாக்குதல் நடத்தி இருப்பது தெரியவந்தது. ரான்சம்வேர் வைரஸை அனுப்பி மருத்துவமனை சர்வர்களை ஹேக்கர்கள் முடக்கியது உறுதியானது.

சர்வர்கள் முடங்கியதால், கணினிகளில் நோயாளிகளைப் பற்றி சேமித்து வைக்கப்பட்ட தகவல்களை மருத்துவர்கள் பயன்படுத்த முடியாமல் போனது. தரவுகளை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் இறங்கினர். பத்து நாட்கள் மேலாகியும் இன்னும் மருத்துவமனை சர்வர்களிலிருந்து தரவுகளை மீட்டெடுக்க முடியவில்லை. இதனால், எய்ம்ஸ் மருத்துவமனையில் டிஜிட்டல் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு, வேலைகள் கைப்படையாக செய்யப்படுகின்றன. இந்நிலையில், இந்த சைபர் தாக்குதலை சீன ஹேக்கர்கள் நிகழ்த்தியிருக்கக் கூடும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்