Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

சுழல் பந்து வீச்சுக்கு எதிரான உலகின் தற்போதைய சிறந்த பேட்டர் ஸ்ரேயஸ் அய்யர்!

வங்கதேசத்திற்கு எதிராக இந்தியா 2வது டெஸ்ட் போட்டியில் 145 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட தண்ணி குடிக்க வேண்டியதாயிற்று. கடைசியில் ஸ்ரேயஸ் அய்யரின் சுழல் பந்து வீச்சுக்கு எதிரான அமைதியான ஒரு ‘ஜீனியஸ்’ ரக பேட்டிங்கும் அஸ்வினின் அற்புதமான தைரிய இன்னிங்சும் இந்திய அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தது. ஆனால் இந்த வெற்றி பெருமை கொள்ளத் தக்கதுதானா என்றால் இல்லை என்றே கூற வேண்டும்.

ஏனெனில் முதலில் குல்தீப் யாதவ்வை உட்கார வைத்து விட்டு ஆடிய போட்டியில், தப்பும் தவறுமாக ஒரு அணித்தேர்வை திமிராக செய்து விட்டு வெற்றி பெறுகிறது என்றால் அவர்கள் செய்த தவறான அணித்தேர்வு நியாயமாகி விடும் பொதுப்பார்வையில், ஆனால் கிரிக்கெட் ஆட்ட தார்மிகத்தின் படி இந்தியா வென்றாலும் குல்தீப் யாதவ்வை ட்ராப் செய்தது அநியாயமே. இங்கிலாந்தில் உலகின் தலை சிறந்த ஆஃப் ஸ்பின்னர் அஸ்வினை கோலி-சாஸ்திரி கூட்டணி உட்கார வைத்து அழகு பார்த்தது வெற்றியில் முடிந்தாலும் எப்படி அநீதியோ அது போல்தான் இந்த வங்கதேசத்திற்கு எதிரான வெற்றி அநீதியில் பிறந்த வெற்றி என்று நாம் கஷ்டத்துடன் ஒப்புக் கொள்ள வேண்டியதுதான்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்