Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

FIFA WC 2022 | பிரமிப்பூட்டும் 91-வது நிமிட கோலால் போர்ச்சுகலை வீழ்த்தி தென்கொரியா தகுதி - கண்ணீருடன் வெளியேறிய உருகுவே!

கத்தார் உலகக்கோப்பையில் நேற்று நடைபெற்ற போர்ச்சுகல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் கொரியா அணி 91வது நிமிடத்தில் தன் 2-வது அற்புத கோலை அடித்து 2-1 என்று வெற்றி பெற்றதால், இதே பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் உருகுவே 2-0 என்று கானாவை வென்றும் இறுதி-16 சுற்றுக்குத் தகுதிபெறாமல் கண்ணீருடன் வெளியேறியது. தென் கொரியாவின் அந்த அற்புத வெற்றி கோல் கானா, உருகுவே இரண்டு அணிகளையும் வெளியேற்றியது. தென் கொரியா சற்றும் எதிர்பாராத விதமாக நாக்-அவுட் சுற்றுக்குத் தகுதி பெற்று பிரேசில் அணியை திங்களன்று எதிர்கொள்கிறது.

உருகுவே கானா அணிகள் மோதிய போட்டியில் எந்த அணி வெல்லுமோ இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெறும் என்ற நிலை இருந்தாலும் கோல் வித்தியாச அடிப்படையில் தென் கொரியா ஏதாவது அதிசயம் நிகழ்த்தி விட்டால் உருகுவே, கானா அணிகள் காலி என்ற நிலை இருந்தது, ஆனால் தென் கொரியா அப்படி செய்யும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. மேலும் உருகுவே அணியின் பயிற்சியாளர் போர்ச்சுகலுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகலுக்கு கொடுத்த பெனால்டிதான் உருகுவேயின் வெளியேற்றத்திற்குக் காரணம் என்று கூறியுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்