Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐசிசி யு-19 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று சாதனை

போட்செஃப்ஸ்ட்ரூம்: ஐசிசி யு-19 மகளிர் டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நேற்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 17.1 ஓவரில் 68 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரியானா மெக்டொனால்ட் 19, அலெக்சா ஸ்டோன்ஹவுஸ் 11, சோபியா ஸ்மால் 11, நியாம் ஹாலண்ட் 10 ரன்கள் சேர்த்தனர். மற்ற வீராங்கனைகள் இரட்டை இலக்க ரன்னை எட்டவில்லை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்