Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ஐசிசி டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றார் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ்

துபாய்: இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் 2022-க்கான ஐசிசி ஆடவர் டி20 கிரிக்கெட்டர் விருதை வென்றுள்ளார். கடந்த ஆண்டு முழுவதும் தனது அபார ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில் அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆண்டுதோறும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டுக்கான பரிந்துரைகள் கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன.


கருத்துரையிடுக

0 கருத்துகள்