Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

கார் விபத்தில் படுகாயம் அடைந்ததால் ஆஸி. டெஸ்ட், ஐபிஎல் தொடரை தவறவிடுகிறார் ரிஷப் பந்த்

டேராடூன்: கார் விபத்தில் படுகாயம் அடைந்ததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற உள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் ரிஷப் பந்த் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் நேற்று முன்தினம் அதிகாலை டெல்லி- டேராடூன் நெடுஞ்சாலையில் தனியாக காரில்பயணித்த போது விபத்துக்குள்ளானார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்