Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

மொபைல் போன் செயலியில் மண் குறித்த விவரங்கள்: சர்வதேச விருது பெற்ற வாடிப்பட்டி மாணவருக்கு முதல்வர் பாராட்டு

மதுரை: மொபைல் போன் செயலி மூலம் போட்டோ எடுக்கப்படும் மண்ணின் வகை, ஈரத்தன்மை, பயிருக்கான தண்ணீர் தேவை உள்ளிட்ட தரவுகளை விவசாயிகள் உடனே தெரிந்து கொள்ளும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்து சர்வதேச விருது பெற்ற வாடிப் பட்டியைச் சேர்ந்த மாணவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

மதுரை மாவட்டம் டி.வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜெ.நிலவழகன். தோல் வியாபாரி. இவரது மனைவி முனைவர் பானுமதி கோவை அண்ணா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக உள்ளார். கோவை காந்திபுரத்தில் குடும்பத்துடன் வசிக்கின்றனர். இவர்களது மகன் என்.சுதர்சன்(19). கோவை கிணத்துக்கடவு ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லூரியில் பிடெக் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பாடத்திட்டத்தில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்