Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் கவலையில்லை, இன்னொரு முறை இப்படி ஆடினால்...- தோனியை எச்சரித்த ரவி சாஸ்திரி

இந்திய அணியின் முன்னாள் பீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஸ்ரீதர் தன் புத்தகத்தில் 2018-ம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியில் எம்.எஸ்.தோனி பேட்டிங் மந்தத்தினால் இந்திய அணி தோற்றதையடுத்து ரவி சாஸ்திரி அணி மீட்டிங்கில் தோனியை கடுமையாக எச்சரித்ததைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அணி தோற்றது பற்றி ரவி சாஸ்திரி கோபம் அடையவில்லை, எம்.எஸ்.தோனி வெற்றிக்கான எந்த முயற்சியும் செய்யாமல் ஒரு போராட்ட குணமே இல்லாமல் போட்டியை தாரை வார்த்ததுதான் ரவிசாஸ்திரியின் கோபம் என்கிறார் ஆர்.ஸ்ரீதர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்