Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

‘உலகக் கோப்பை அணிக்கு செஹல் தேவையில்லை... குல்தீப் யாதவ்தான் தேவை!’ 

இந்தியாவின் முன்னாள் இடது கை ஸ்பின்னரும், முன்னாள் தலைமைத் தேர்வாளருமாக பணியாற்றிய கர்நாடகாவைச் சேர்ந்த சுனில் ஜோஷி 2023 உலகக் கோப்பை இந்தியாவில் நடப்பதையொட்டி இந்திய அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும், யஜுவேந்திர செஹல் தேவையில்லை என்று கூறியுள்ளார்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு சமீபத்தில் வங்கதேசத்திற்கு எதிராக அங்கு டெஸ்ட் ஆடிய குல்தீப் யாதவ் முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகளையும் 40 ரன்களையும் எடுத்து ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். ஆனால், புரியாத புதிராக அடுத்த போட்டியில் உட்கார வைக்கப்பட்டார். மீண்டும் இலங்கை, நியூசிலாந்து அணிக்கு எதிராக இங்கு நடந்த இரண்டு ஒருநாள் தொடர்களிலும் அட்டகாசமாக வீசி அசத்தினார்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்