Header Ads Widget

Breaking News

6/recent/ticker-posts

ரிஷப் பந்த் நலம் பெற வேண்டி கோயிலில் சூர்யகுமார், குல்தீப், வாஷிங்டன் சுந்தர் பிரார்த்தனை

உஜ்ஜைன்: கடந்த மாதம் கார் விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் விரைந்து நலம் பெற வேண்டி சக இந்திய வீரர்களான சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் உஜ்ஜைனில் உள்ள மகாகாளீஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி நாளை நியூஸிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்தப் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடைபெற உள்ளது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மகாகாளீஸ்வரர் கோயிலுக்கு சூர்யகுமார் உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளனர்.


கருத்துரையிடுக

0 கருத்துகள்